Tuesday, March 24, 2009
சிறகுவிதை
சிறகுகள் தீய
புகையும் நெருப்பினில்
உயிர் பொசுக்கினாலும்
மீண்டும் வருவேன்
ஃபீனிக்ஸ் பறவையாய்.
கனவுகள் தீய
கருக்கிப்போட்டாலும்
கிளை துளிர்ப்பேன்
வேர்களில் உயிர்த்து.
எரிந்து விழும்
நட்ச்சத்ததிரங்களுக்கிடையே
விடி வெள்ளியாய்
வானில் முளைப்பேன்.
உலர்ந்து விழும்
சருகுகளுக்கு
பாடம் சொல்வோம்.,
மெய்ப்படும்வரை
காண்போம் கனவுகள்.,
அதுவரை
வீழ்ந்தாலும்
விதைகளாய் வீழ்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment