Friday, April 10, 2009

பிரிவின் கதை சொல்லி !


இதுதான்

நான் வளர்ந்த வீடு

புன்னகையோடு

ஆமோதி்த்தாய்

உன் கண்கள்

மினுங்கியது

திராட்சைப்பழங்களாய்

வீட்டின் வெளியெங்கும்

மி்தந்த என் வாசம்

உன் நாசியின்    துளைப்பற்றி

நாம் சல்லாபித்தோம்

நிலாவொளியின் குளுமையில்

உனக்கும் சில வார்த்தைகள்

மீ்த்மிருந்தது 

மெளனத்தின் மீது.

மாவிலை உரசும்

மாடியின் நிழலில்

நட்சத்திர இரவுகளின்

தாயுடன் களித்த 

பால்ய நாட்களை

நினைவூட்டினாய்

உனக்குப்பிடித்த

உன் மாடியின் 

படிக்கட்டுகளை

தாவிக்கடந்தோம்

இரண்டிரண்டாய்

ஒரு விடியலுக்குள்

நாம் பிரிக்கப்பட்டோம்

ஒரு வாரமாய்க்காணாத

என்னைக் கண்டுபிடித்து

பிணைத்தார்கள் சங்கிலியால்

ஆனாலும் நீ பாலூட்டுவாய்

நம் குழந்தைகளுக்கு

பிரிவின் ஈர

கதைகள்  சொல்லி.

No comments:

Post a Comment