Tuesday, May 26, 2009

காற்று வெளியிடை....


கருக்கு பட்டயம்சூழ்

குருத்தோலைக்கிடையே 

மரப்பாச்சிகளைப்போல் 

முகம்காட்டினோம், 

விடலைப் பெண்ணின்

எலும்புகள் கிளைக்கும்

பருவம்போல் முகிழ்த்தன

பச்சை மார்பகங்கள்

வானம் அளைந்து

வீழும் நட்சத்திரங்களை

இலைகளால் உயிர்த்தோம்

மூத்த ஓலைகள்

வீழும்போது

வயதின் வரியை

எழுதி உதிர்ந்தன

சுண்ணம் பூசிய

பானைகள் பொருத்தி

குருத்துகள் சீவி

கள் சேர்க்கும்

சொள்ளமுத்துநாடார்

எங்கள் ராஜகுமாரன்

பாம்படம் அணிந்த

நகோமிபாட்டியின

நினைவுகள் சுமந்த 

எங்கள் தண்டுவடம்

சுவாசித்தன

காற்றுவெளியிடை

காதலின்

ஈரவரிகளை..! 

No comments:

Post a Comment