Friday, May 8, 2009

இரவு பகல் கடந்து


இமைகளை அழுத்தியது 
நகரத்தின் வெம்மை, 
சேர்ப்பிக்க வேண்டியதை 
சேர்த்துவிட்டு 
இமைமூட வேண்டும், 
வாகனம் விரையாத 
சாலையின் ஓரத்தில். 
கானல் காற்றின் 
சாட்டை சொடுக்கி 
பயணித்தேன் 
புரவியின் விரைவாய் 
இரு சக்கர வாகனத்தில். 
விற்காத பொருட்கள் 
திறக்காத கதவுகளுக்கானது. 
சந்தேகிக்கும் பார்வைகளினூடே 
மறுக்கப்படுகிறது, 
தாகம் தீர்க்கும் நீரும் 
இலவசமாகத் தரும் எதுவும். 
பேரம் நடக்கிறது 
படியாத தொகைகளில் 
ஜன்னல்களின் கம்பிகளூடே 
ஆண்களின் அரவமற்ற வீடுகளில் 
இரவுபகல் திரைவிலக்கி 
பயணிக்கிறோம் 
வியாபாரம் முடியும்வரை...

No comments:

Post a Comment