Wednesday, May 27, 2009

ஒரு நாள் இனிவரும்....


நீ என உறுதிப்படுத்த 

தேவைப்பட்டது 

உன் இறப்பிற்கான சான்று.

நீயில்லையென 

நம்ப மறுக்கின்றன 

சுதந்திரத்திற்கான 

வேள்வியின் கண்கள.

வல்லூறுகளின்

மேற்பார்வையில் 

இனவெறியை   

கட்டவிழ்த்து 

வன்புணர்ச்சியில் 

வாகை சூடியது 

ஓநாய் கூட்டம்.

பாதுகாப்பு அரணில் 

தூங்கும் எமை 

எரியூட்டுபவனோடு 

வாழ இயலுமோ 

உடன்படிக்கை இட்டு.

மௌன சாட்சியாய் 

உறையும் எம் விழிகளில் 

உயிருடன் 

வாழ்கிறாய் நீ.

யாரோ நகர்த்தும் 

சூதாட்டக் காய்களில

துறைமுகங்கள் விற்று

சிம்மாசனம் பிடித்த

அவர்களின் தலை

வெட்டப்படும் ஒரு நாள். 

No comments:

Post a Comment